Monday, March 2, 2009

நீ

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு சேலை
கட்டிவருகையில்
எனக்காக
ஒரு கவிதையையும்
கூட்டி வருபவள்
நீ

நீண்ட வரிசையில்
மிகப்பின்னால் நிற்கையில்
காத்திருப்பின் வலியை
நீடிக்கச் சொல்கிறது
மனசு...
எனக்கு முன்னால்
நீ

வெந்துதணியும்
வெப்பக்காட்டில்
முக்கி முணகித்திரிந்த
காதல்பறவை நான்
வாரிக்கொண்ட
வேடந்தாங்கல்
நீ

இருண்ட தேசத்தில்
எரியும்
ஒற்றை மெழுகுவர்த்தியாய்
எனக்கென எப்போதும்
நீ

--நாவிஷ் செந்தில்குமார்

5 comments:

தமிழன்-கறுப்பி... said...

இரண்டாவது நீ-
சில நினைவுகளை கொண்டு வந்தது...

தமிழன்-கறுப்பி... said...

நல்லாருக்கு...

Anonymous said...

///நீண்ட வரிசையில்
மிகப்பின்னால் நிற்கையில்
காத்திருப்பின் வலியை
நீடிக்கச் சொல்கிறது
மனசு...
எனக்கு முன்னால்
நீ///

ரொம்ப நல்லாருக்கு இந்த வரிகள்! நாவிஷ்! வாழ்த்துக்கள்!

Senthilkumar said...

///தமிழன்-கறுப்பி... கூறியது...
இரண்டாவது நீ-
சில நினைவுகளை கொண்டு வந்தது...
///

நன்றி தமிழன்-கறுப்பி

Senthilkumar said...

////ஷீ-நிசி கூறியது...

ரொம்ப நல்லாருக்கு இந்த வரிகள்! நாவிஷ்! வாழ்த்துக்கள்!
////
நன்றி கவிஞரே...