Thursday, February 17, 2011

இரண்டாவது வார்த்தையில் இறந்துபோனவன்

மூன்றாவது வார்த்தையை
சொல்லத் தொடங்கினாய்...
இரண்டாவது வார்த்தையில்
இறந்துபோனவனிடம்
00
யாரோபோல வந்தாய்
எத்தனையோ நிகழ்த்திவிட்டு
யாரோபோலவே சென்றாய்
00
கடல்மண்
அள்ளிப்போனாய்
உன் காலணியில்
00
நாம் நடந்துபோனோம்
காலத்தின் மீது
காதலோடு...
00
இவையாவும் காதலில்லை
காதலே இல்லாமலும்
இல்லை.
--நாவிஷ் செந்தில்குமார்