Sunday, March 1, 2009

காதலி கட்டிய சேலை

உன்னை முழுதும்
மறைத்த சேலை
என் காதலை
வெளிச்சம் போட்டுக்காட்டியது

ரசித்துக்கொண்டிருக்கையிலேயே
நீ செல்லும்
வாகனம் வந்தது...
காரோட்டி வந்தவன்
தேரோட்டியாய்ப் போனான்

உன் வருகை மழை
இல்லாத நாட்களிலும்
வாசனைத் தூரலால்
செழித்துக் கிடக்கின்றது
என் வீதி.

முலாம் பூசிக்கொள்வதற்கு
முன்பாக உன்னைப்
பூசிக்கொண்டது போல
எப்போதும்
உன்னையே காட்டும்
என் வீட்டுக்கண்ணாடி

நீ ஊருக்குச் செல்வதெல்லாம்
வெறும் பேருக்குத்தான் போல
உன் நினைவுகள்
என்னையே சுற்றிக்கொண்டிருக்கின்றன

--நாவிஷ் செந்தில்குமார்

1 comment:

Unknown said...

ரசித்துக்கொண்டிருக்கையிலேயே
நீ செல்லும்
வாகனம் வந்தது...
காரோட்டி வந்தவன்
தேரோட்டியாய்ப் போனான்///

very nice..