Friday, July 30, 2010

ஒரு காதலி...ஓராயிரம் காதல்!

போனால் போகட்டுமென
ஒரு பார்வை பார்ப்பாய்
வீணாகப்
போய்விடக்கூடாதென
அதைக் கவிதையில்
அடைத்துவைப்பேன்!
00
கவிதையைப் புரிந்துகொள்ள
முடியவில்லையென
கவலைப்படாதே...
இங்கே பலருக்கும்
தன்னைப் புரிந்துகொள்கிற
தன்மை இருப்பதில்லை.
00
சிற்பங்களோடெல்லாம் நின்று
புகைப்படம் எடுக்காதே...
உன்னோடு பார்க்கையில்
அவையெல்லாம்
அற்பமாகத் தெரிகின்றன பார்!
00
ஒருநாள்
உன் முத்தங்கள் அனைத்தையும்
கொடுத்துவிடு…
எத்தனைதான் வைத்திருக்கிறாய்
என கணக்குப் பார்த்துவிட
துடிக்கிறது மனசு.
00
எனக்கு
ஒரு காதலி
அவள்மீது
ஓராயிரம் காதல்!

Friday, July 2, 2010

பத்துக்கண்கள்

விரல்களைத் தாண்டி
வளர்ந்துவிட்ட நகம்
உன் நினைவுகள்
வெட்டமுடிகிறதே தவிர
வேரோடு களைய நினைத்தால்
உயிர் போகிறது
வலி!
00
மின்காந்த அலைகளுமிழும்
அவளினிரு கண்களைத்
தவிர்க்க வேண்டி
தலை கவிழ்த்தேன்...
பாதங்களில்
பத்துக்கண்கள் கொண்டு
வெறிக்கிறாள்.
00
நீ நடந்து செல்லும்
பாதையெங்கும்
ரங்கோலியொன்றை
வாங்கிக்கொள்கிறது
இந்தப் பூமி
00
உன்னிடம் மட்டுமே சொல்ல
என்னிடம்
ஒரு வார்த்தையுண்டு
உன்னோடு வாழ மட்டுமே
என்னிடம்
ஒரு வாழ்க்கையுண்டு
00
எனக்கு இனி நான்
வேண்டாம்…
நீ மட்டுமே போதும்.
00
நீ
நான்
நம்மிடையே காதல்.
பரிமாறிக்கொண்ட
பரிசுப்பொருட்களைத்
திரும்பக்கொடுத்துவிட்டுப்
பிரிந்தோம்...
அந்த முத்தங்களை
என்ன செய்யலாம்?
-நாவிஷ் செந்தில்குமார்.