Thursday, February 17, 2011

இரண்டாவது வார்த்தையில் இறந்துபோனவன்

மூன்றாவது வார்த்தையை
சொல்லத் தொடங்கினாய்...
இரண்டாவது வார்த்தையில்
இறந்துபோனவனிடம்
00
யாரோபோல வந்தாய்
எத்தனையோ நிகழ்த்திவிட்டு
யாரோபோலவே சென்றாய்
00
கடல்மண்
அள்ளிப்போனாய்
உன் காலணியில்
00
நாம் நடந்துபோனோம்
காலத்தின் மீது
காதலோடு...
00
இவையாவும் காதலில்லை
காதலே இல்லாமலும்
இல்லை.
--நாவிஷ் செந்தில்குமார்

4 comments:

சுதர்ஷன் said...

//காலத்தின் மீது
காதலோடு.//

உண்மை தான் ..காதலோடு சேர்ந்த காலத்தின் மீதும் காதல் கொள்கிறோம் ..வாழ்த்துக்கள் .. :)

Senthilkumar said...

நன்றி சுதர்சன் :)

Ranjani raga said...

nice....

Ranjani raga said...

nice.....