Saturday, August 28, 2010

ஒரு விரல் ஒரு லட்சம்

காய்ந்த உதடுகளை
நீ ஈரப் படுத்திக்கொள்வது
அழகு!
காய்ந்த என் உதடுகளை
உன் உதடுகளால்
ஈரப்படுத்துவது
இன்னும் அழகு!
00
நீயொரு
மழைக்கவிதை கேட்டாய்...
நீயொருநாள்
மழையில்
நனைந்த கதையைச்
சொன்னேன்.
00
சாரல் துளிகள் படிந்த
சாளரக் கண்ணாடியில்
உன் பெயரை
எழுதினேன்...
அழிக்க மனமில்லாத
மழை
நின்று போனது!
00
கை விரல்களால் காட்டு
எத்தனை முத்தங்கள் தருவாய்?
எனக் கேட்டாய்
ஒரு லட்சம்…
இரண்டு லட்சம் என
விரல்களை விரிக்கத் தொடங்கியதும்
வெட்கத்தில்
நச்சென்று என் மார்பில்
தலை சாய்த்தாய்...
இச்சென்று உன் நெற்றியில்
விழுந்தது
முதல் முத்தம்!
--நாவிஷ் செந்தில்குமார்

No comments: