Wednesday, June 23, 2010

காதல் கவிதைகள்

வழக்கமான
இசையைப் போலில்லை
இன்றவளின்
கொலுசோசை
உதிர்ந்து போயிருக்கலாம்
சில மணிகள்…

நானும் அவளும்
பிரிவதற்கான காரணங்களை
அடுக்கிவிட்டு
பிரிந்துவிட்டோம்…
சேர்வதற்கான காரணத்தை
வைத்திருக்கிறோம்
அது காதல்

இனாமாகக் கொடுத்ததாகச்
சொல்வாள்…
இரவல் பொருளாக
நினைத்துதான்
வாங்கினேன் என
திரும்பக் கொடுத்துவிடுவேன்
முத்தத்தை

தேநீர்க் கோப்பையில்
நிரம்பிக்கிடக்கிறது
காதல்
சுவைத்துத் தீர்க்கிறோம்
நீயும் நானும்…
நிரப்பிக் கொண்டேயிருக்கிறது
காலம்

உலகமொத்தத் திமிர்
உனக்கு - அது
உண்டாக்கிச் சென்றது
காதல்
எனக்குள்

தொட்டுப் பேசாதது
காதலுக்குக் கெட்டப் பழக்கம்
அதை நீ விட்டொழிப்பது
எப்போது?

3 comments:

Mohan said...

காதல் வழிகிறது கவிதையில்...நன்றாக இருந்தது!

மதுரக்காரி said...

சேர்வதற்கான காரணத்தை
வைத்திருக்கிறோம்
அது காதல்.//////////////

unmai thaan..........

மதுரக்காரி said...

சேர்வதற்கான காரணத்தை
வைத்திருக்கிறோம்
அது காதல்.////////

unmaithaan........ :)