Wednesday, February 18, 2009

காதல் நிமித்தம்

பொழுது தோறும்
போக நினைக்கும்
அவள் வீதிப்பயணம்

வாசலுக்கு
நீர் தெளிக்க வருகையில்
உயிர் துப்பிப் போகும்
அவளின் ஓரப்பார்வை

உண்ண உண்ண
பசிக்கத் தூண்டும்
அவள் நினைவு

அவளைத் தேடிக்கண்டதும்
தொலைந்து போகும்
மனசு

அவளைப் பார்க்காத
நாளிலெல்லாம்
சட்டெனப் பிறக்கின்ற
மரணம்...
--நாவிஷ் செந்தில்குமார்

No comments: